ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தற்போது கமல் நடிக்கும் இந்தியன் -2 , ராம்சரண் நடிக்கும் ஆர்சி -15 ஆகிய படங்களை இயக்கி வருகிறார் ஷங்கர். இந்த படங்களை அடுத்து 1000 கோடி பட்ஜெட்டில் அவர் ஒரு சரித்திர படத்தை இயக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. மதுரை எம்.பி சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நாவலை மையமாக கொண்டு அந்த படம் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூர்யா நாயகனாக நடிக்கும் அப்படம், தமிழ் உள்பட பல மொழிகளில் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா-42 படம் 3டி தொழில்நுட்பத்தில் சரித்திர கதையில் உருவாகும் நிலையில், அடுத்து ஷங்கர் இயக்கும் பிரமாண்ட படத்திலும் சரித்திர கதையிலேயே நடிக்கப்போகிறார் சூர்யா. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.