இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த படம் 'திருச்சிற்றம்பலம்'. ஒரு இயல்பான காதல் கதையாக ரசிகர்களின் மனதில் இப்படம் இடம் பிடித்தது. படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக நித்யா மேனனின் கதாபாத்திரமும் நடிப்பும் இருந்தது. அதே சமயம், படத்தில் கதாநாயகனாக நடித்த தனுஷின் நடிப்பையும் விட்டுவிட முடியாது. அவர்கள் இருவருடைய நடிப்பும் திரையில் பிரமாதமாக இருந்தது.
இப்படத்தைப் பார்த்த இயக்குனர் ஷங்கர் கூறுகையில், “திருச்சிற்றம்பலம், அழகான ஒரு படம். வலிகளைத் தொடர்ந்து வரும் அன்பான தருணங்களில்தான் அழகு இருக்கிறது. நித்யா மேனனின் கதாபாத்திரமும், அவரது சிறப்பான நடிப்பும், இதயத்தை கொள்ளையடிக்கிறது. மித்ரன் ஜவஹர் அற்புதமாக எழுதியுள்ளார். டிஎன்எ, வழக்கம் போல, அவர்களது சிறப்பில்…பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோருக்கும் குழுவினருக்கும் வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'திருச்சிற்றம்பலம்' படம் இன்று மூன்றாவது வாரத்தைத் தொட்டுள்ளது. படத்தின் வசூல் 100 கோடியை நெருங்க வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.