தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான படம் திரிஷ்யம். மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்த படத்தின் தமிழ் ரீமேக் பாபநாசம் என்ற பெயரில் உருவானது. கமலஹாசன், கவுதமி முக்கிய வேடத்தில் நடித்தார்கள். தமிழில் வெற்றி பெற்ற அப்படம் தெலுங்கு, கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்தாண்டு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் மலையாளம் மற்றும் தெலுங்கில் வெளியானது. இந்த நிலையில் தற்போது திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகப் போவதாக மலையாள சினிமாவில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகளை இயக்குனர் ஜீத்து ஜோசப் தொடங்கிவிட்டதாகவும், முதல் இரண்டு பாகங்களில் நடித்த மோகன்லால், மீனா, ஆஷா சரத், எஸ்தர் அணில் ஆகியோரே மூன்றாம் பாகத்திலும் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.