‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
விஜய் தற்போது முதன்முறையாக வாரிசு என்கிற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைந்துள்ளார். வம்சி பைடிப்பள்ளி இயக்கி வரும் இந்த படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது.
பொதுவாக லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே அவற்றில் அதிகப்படியான வில்லன்கள் இடம் பெறுவ வழக்கம். இந்தப்படத்தில் தென்னிந்திய மற்றும் பாலிவுட்டிலிருந்து பிரபலங்களை அழைத்து வந்து இந்த படத்தில் நடிக்க வைக்க இருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ். பாலிவுட்டிலிருந்து சஞ்சய் தத், மலையாளத்திலிருந்து பிரித்விராஜ் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் மொத்தம் இந்த படத்தில் ஆறு வில்லன்கள் என்றும் அதில் ஒருவராக நடிகர் அர்ஜுன் நடிக்க இருக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
எண்பது, தொண்ணூறுகளில் ஆக்சன் கிங்காக வலம் வந்த அர்ஜுன் தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் குணச்சித்திர மற்றும் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக பிரபல ஹீரோக்களின் படங்களில் அவர்களுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் அர்ஜூன். அந்த வகையில் முதன்முறையாக விஜய்யுடன் இவர் இணைந்து நடிப்பதும் விஜய்க்கு வில்லனாக நடிப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கவே செய்யும்.