கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் சரித்திரப் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி இசை மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் ஏஆர் ரஹ்மானுக்குச் சொந்தமான எஎம் ஸ்டுடியேவில் இப்படத்தின் பின்னணி இசை வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. பிரபல டிரம்ஸ் இசைக் கலைஞர் சிவமணி அது பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரும் சக இசைக் கலைஞர்கள் சிலரும் அதற்கான வேலையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு அற்புதமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவின் பின்னணியில் திரையில் 'வந்தியத்தேவன்' கார்த்தியின் புகைப்படம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. இந்த வருடம் செப்டம்பர் 30ம் தேதி படம் வெளியாகிறது. இந்தப் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.