ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மாநாடு படத்தின் வெற்றிக்கு பின் வெங்கட்பிரபு மன்மதலீலை படத்தை எடுத்தார். அந்த படமும் வரவேற்பை பெற்றது. அடுத்து நாகசைதன்யாவை வைத்து தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் உருவாகும் படத்தை இயக்குகிறார். நாகசைதன்யாவின் 22வது படமாக உருவாகும் இந்த படம் விரைவில் உருவாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்க போவதாக தகவல் வந்தது. தற்போது அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம் முதன்முறையாக வெங்கட்பிரபு படத்திற்கு இளையராஜாவும், யுவனும் இணைந்து இசையமைக்க உள்ளனர்.
இதுபற்றி வெங்கட்பிரபு கூறுகையில், ‛‛கனவு நனவாகி உள்ளது. முதன்முறையாக எனது பெரியப்பா இளையராஜா உடன் இணைந்து, தம்பி யுவன் உடன் பணியாற்ற உள்ளேன்'' என்றார்.
வெங்கட்பிரபுவின் படத்திற்கு இசையமைக்க போவதற்கு தெலுங்கில் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளயிட்டுள்ளார் இளையராஜா. இதற்கு வெங்கட்பிரபு, ‛‛இந்த ஆஸ்கருக்கு நன்றி ராஜா அப்பா. இது எனது வாழ்நாள் சாதனை. லவ் யூ ராஜா பா'' என தெரிவித்துள்ளார்.