ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
எழுத்தாளர் பெருமாள் முருகன் என்பவர் எழுதிய வறுகறி என்ற சிறுகதையை ‛சேத்துமான்' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளனர். தமிழ் என்ற புதியவர் இயக்கியுள்ளார். தாத்தா பேரனுக்கிடையே உள்ள மாசற்ற அன்பை பேசும் படமாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இதில் தாத்தா வேடத்தில் மாணிக்கமும், பேரன் வேடத்தில் அஸ்வினும் நடித்திருக்கிறார்கள். பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். இப்படம் புனே சர்வதேச திரைப்பட விழா மற்றும் கேரளா சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. அதோடு சென்னை திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த படத்திற்கான விருது பெற்றது. இந்நிலையில் இந்த படம் மே 27ல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.