பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் ஏப்ரல் 14ம் தேதி வெளிவந்த படம் 'கேஜிஎப் 2'. இப்படம் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமான வசூலை இதுவரை பெற்றுள்ளது.
ஹிந்தியில் ரூ.400 கோடி வசூலைப் பெற்றுள்ள இந்தப் படம், கன்னடத்தில் ரூ.160 கோடி, தெலுங்கில் ரூ.130 கோடி வசூலைப் பெற்றுள்ளது. தற்போது தமிழகத்திலும் ரூ.100 கோடி வசூலைக் கடக்க உள்ளது. ஒரு திரைப்படம் வெளியான ஐந்து மொழிகளில் நான்கு மொழிகளில் 100 கோடி வசூலித்திருப்பது பெரிய விஷயம். வெளிநாடுகளிலும் இப்படம் 160 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
தமிழில் 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு ஒரு டப்பிங் படம் ரூ.100 கோடி வசூலிப்பது இதுவே முதல் முறை. அதுவும் ஒரு கன்னடப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு தமிழிகத்தில் 100 கோடி வசூலிப்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. கன்னடப் படத்தை இப்படி ஓட வைக்க வேண்டுமா என திரையுலகத்தைச் சேர்ந்த சிலர் கேள்வி எழுப்பியிருந்தாலும் மக்கள் விரும்பும் படங்கள் ஓடி வசூலைக் குவிக்கும் என்று இங்குள்ளவர்களுக்கு புரிய வைத்திருக்கிறார்கள்.