தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கன்னடத்தில் உருவாகி பான் இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் பெற்றுள்ளன. இதில் கதாநாயகனாக நடித்த யஷ் மட்டுமல்லாமல் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, முதல் பாகத்தில் வில்லனாக நடித்த கருடா ராம் ஆகியோர் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய கவனம் பெற்றுள்ளனர். குறிப்பாக முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ரசிகர்களை ரொம்பவே கவர்ந்து விட்டார்.
இந்த நிலையில் ஸ்ரீநிதி ஷெட்டி தனது பேட்டி ஒன்றில் மலையாள படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை என்று கூறியுள்ளார். மேலும் மலையாளத்தில் தான் முதன்முதலாக பார்த்த படம் துல்கர் சல்மான் நடித்த சார்லி தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
சார்லி படத்தின் வித்தியாசமான கதையும், அதில் துல்கர் சல்மானின் நடிப்பும் அவரை ரொம்பவே வசீகரித்து விட்டதால், அந்த சமயத்தில் ஹாஸ்டலில் தங்கி படித்துக்கொண்டிருந்த ஸ்ரீநிதி ஷெட்டி தனது தோழிகள் மற்றும் சக மாணவிகளிடம் அந்தப்படத்தைப் பற்றி புகழ்ந்து கூறி ஒவ்வொருவரையும் சார்லி படம் பார்க்கும்படி சிபாரிசு செய்ய ஆரம்பித்துவிட்டாராம். அதுமட்டுமல்ல அவர்கள் படம் பார்த்துவிட்டு வந்த பிறகு, அவர்களது கருத்தையும் கேட்டு படத்தை பற்றி தான் நினைத்த மாதிரியே அவர்களும் பீல் செய்துள்ளார்களா என்பதையும் கேட்டு தெரிந்து கொள்வாராம்.