டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இயக்குனர் சுந்தர்.சி சினிமா துறையில் நுழைந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும், தற்போதும் அவரது படங்களுக்கு என தனி ரசிகர் வட்டமும், வரவேற்பும் இருக்கிறது. காலங்கள் மாற மாற அதற்கேற்றார்போல் தன்னை மாற்றிக்கொண்டு நகைச்சுவையில் புதுப்புது பணிகளை கையாளுவது சுந்தர்.சியின் உத்திகளில் ஒன்று. அதேபோல சுந்தர்.சியின் படங்களில் ஹீரோக்களுக்கு இணையாக நகைச்சுவை நடிகர்களின் கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டிருக்கும்..
அந்தந்த காலகட்டத்தில் உச்சத்தில் இருக்கும் நகைச்சுவை நடிகர்கள் தொடர்ந்து அவரது படங்களில் இடம் பெறுவார்கள் அந்த வகையில் அவரது ஆரம்ப கால படங்களில் கவுண்டமணி தொடர்ந்து இடம்பெற்று வந்தார், அவருக்குப்பின் வடிவேலு.. வடிவேலு சினிமாவில் இருந்து ஒதுங்கிய நிலையில் அவரை தொடர்ந்து சந்தானத்துடன் கூட்டணி அமைத்தார்.
சந்தானம் ஹீரோவான உடன் சூரி, சூரியை தொடர்ந்து யோகிபாபு.. தற்போது யோகிபாபு பிஸியாக உள்ள நிலையில் புதிதாக காமெடியில் வரவேற்பை பெற்று வரும் நடிகர் ரெடின் கிங்ஸ்லீ என காமெடியை மட்டுமல்லாது காமெடி நடிகர்களையும் தனது படங்களில் அப்டேட் செய்து வருகிறார் சுந்தர்.சி. தற்போது ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கூட்டணியில் அவர் இயக்கி வரும் படத்தில் ரெடின் கிங்ஸ்லீ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வெளியானால் இவருக்கு இன்னும் வரவேற்பு அதிகரிக்கும் என்பது நிச்சயம் என்கிறார்கள் படக்குழுவினர்..