பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் 'ராதேஷ்யாம்' படம் அடுத்த வாரம் மார்ச் 11ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது.
நேற்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த படத்தின் பேனர்களில் ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனத்தின் ஸ்டிக்கர்களை அரை குறையாக ஒட்டியிருந்தனர். படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட்தான் வெளியிடுகிறது என எப்போதோ தகவல் வெளியானது. அப்படியிருக்கையில் பிளக்ஸ் பேனர்களில் நிறுவனத்தின் பெயரை சேர்க்காமல் விட்டிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது 'மாமன்னன்' படத்தின் முதல் நாள் படப்பிடிப்பையே 'கட்' அடித்துவிட்டு வந்தார் உதயநிதி. அவர் பேசும் போது இயக்குனர் மாரி செல்வராஜிடம் கேட்டுக் கொண்டுதான் 'கட்' அடித்து வந்தேன் என்றார். மேலும், தமிழகம் முழுவதும் இப்படம் 175 தியேட்டர்களில் வெளியாகப் போகிறது என்றார்.
சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படம் மார்ச் 10ல் அதிக தியேட்டர்களில் வெளியாவதால் 'ராதேஷ்யாம்' படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்கிறார்கள். இது இப்படத்தைப் பொறுத்தவரையில் குறைவான தியேட்டர்கள்தான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.