டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில் மேயாதமான் படத்தில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அதையடுத்து கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர் உள்பட சில படங்கள் எடுத்தவர் தற்போது குருதி. ஆட்டம். பொம்மை. யானை. ருத்ரன். திருச்சிற்றம்பலம் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். ராஜவேல் என்பவரை கடந்த பத்து வருடங்களாக காதலித்து வரும் பிரியா பவானி சங்கர், அவரது பிறந்த நாளையொட்டி தனது சமகவலைதளத்தில் ஒரு புகைப்படத்துடன் வாழ்த்து செய்தியும் வெளியிட்டுள்ளார்.
அதில், ‛‛நீ ஒரு மோசமான டீன்ஏஜ் பாயாக இருந்து இப்போது ஒரு அற்புதமான மனிதராக மாறி விட்டாய். நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. எப்போதுமே புன்னகை, சாகசங்கள், அன்பு, நட்பு, அமைதி ,ஆரோக்கியம் என அனைத்தும் உனக்கு கிடைக்க வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். அதோடு நான் பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் உனக்கு பிடிக்காது என்று தெரியும். அதனால் தான் இதனை பதிவு செய்தேன்'' என தெரிவித்துள்ளார் பிரியா பவானி சங்கர்.