தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் சூப்பர்மேன் கதையம்சத்துடன் மின்னல் முரளி என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் சூப்பர்மேன் பவர் கொண்ட மின்னல் முரளி கதாபாத்திரங்களில் டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் இருவரும் நடித்திருந்தனர். இதில் குரு சோமசுந்தரம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் அதிக பாராட்டுகளை பெற்றார். இவருக்கு இந்த படத்தின் வெற்றியால் தமிழிலும் மலையாளத்திலும் அதிக பட வாய்ப்புகள் தேடி வருகின்றன.
இந்தநிலையில் இரண்டு மின்னல் முரளிகளும் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து சந்திப்பு நிகழ்த்தியுள்ளனர். டொவினோ தாமஸ் வீட்டிற்கு தனது குடும்பத்துடன் சென்றுள்ளார் குரு சோமசுந்தரம். இதுபற்றி தங்களது சோஷியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை இருவரும் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
குரு சோமசுந்தரம் இந்த சந்திப்பு பற்றி கூறும்போது, “இன்று ஜெய்சனும் ஷிபுவும் சந்தித்துக்கொண்டனர். ஜெய்சன் வீட்டில் எங்களுக்கு அன்பான வரவேற்பும் அருமையான உணவும் கிடைத்தது.. இதனால் ஜெய்சன் மீது இருந்த பழிவாங்கும் எண்ணத்தை கைவிட்டு, நான் நல்லவனாக திருந்தி விட்டேன்” என்று வேடிக்கையாக கூறியுள்ளார்.
இந்தப்படத்தில் ஜெய்சன் ஆக டொவினோ தாமஸும் ஷிபுவாக குரு சோமசுந்தரமும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.