இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சமீபத்தில் நடைபெற்று முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியின் வெற்றியாளாராக தேர்வானவர் ராஜூ ஜெயமோகன். நட்புனா என்னனு தெரியுமா என்கிற படத்தில் நடித்துள்ள இவர், இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியவர். படங்களில் நடித்திருந்தாலும் தனக்கு இயக்குனராகவே விருப்பம் என பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே பலமுறை கூறிவந்துள்ளார் ராஜூ.
அதேசமயம் பத்து வருடங்களுக்கு முன் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அவரிடம் இருந்து கைநழுவிப்போன விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.. இந்தப்படத்தில் முக்கியமான இடம்பெற்ற மணிமாறன் கதாபாத்திரத்தின் ஜூனியர் வெர்சனில் நடிப்பதற்காக ராஜூ முதலில் தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் பின்னாளில் சீனியர் மணிமாறனாக நடிக்க இருந்த விகாஷின் முகச்சாயலுடன் ராஜூவின் உருவம் சரியக மேட்ச் ஆகவில்லை. குறிப்பாக ராஜூவின் கண்கள் அதற்கு மிகப்பெரிய தடையாக இருந்தது. அதனால் ராஜூவை நீக்கிவிட்டு அந்த கதாபாத்திரத்தில் ரின்சன் சைமன் என்பவரை நடிக்க வைத்தனர். இந்த தகவல் ராஜூவின் சமீபத்திய பேட்டி ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.