வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி, ஞாயிறு முழு ஊரடங்கு என்றாலும் இந்த வருடத்தின் முதல் வெள்ளிக்கிழமையான கடந்த வாரம் ஜனவரி 7ம் தேதியன்று மூன்று புதிய படங்கள் தியேட்டர்களில் வெளியாகியது.
இந்த வாரம் பொங்கல் வாரம் என்பதால் கிடைக்கும் வாய்ப்பில் படங்களை வெளியிட்டுவிட வேண்டும் என சில தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளார்கள். பொங்கலுக்கு அதிக தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட 'வலிமை' வெளிவராததே இதற்குக் காரணம்.
ஜனவரி 13ம் தேதி, “கார்பன், என்ன சொல்லப் போகிறாய், கொம்பு வச்ச சிங்கமடா, மருத, நாய்சேகர்” ஆகிய படங்களும், ஜனவரி 14ம் தேதி 'எஜிபி, பாசக்காரப் பய, தேள்” ஆகிய படங்களும் வெளியாக உள்ளன. இவற்றில் எந்தப் படங்களுக்கு எத்தனை தியேட்டர்கள் கிடைக்கும் என்பது அந்தந்த தயாரிப்பாளர்களின் ஆதிக்கத்தைப் பொறுத்தது.
தினசரி 3 காட்சிகள் ஓடினால் கூட போதும், போட்ட முதலீட்டை எப்படியாவது எடுத்துவிடலாம் என்ற எண்ணத்தில் இப்படங்களை வெளியிடுகிறார்கள். மக்கள் கொடுக்கும் ஆதரவைப் பொறுத்தே இவற்றின் வசூலும் அமையும்.