ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் வெளிவந்த 'புஷ்பா' படத்தில் இடம் பெற்ற 'ஓ அன்டாவா' பாடல் மூலம் பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது கிடைத்துள்ள ஓய்வில் கோவாவிற்குச் சென்று தன்னுடைய விடுமுறையைக் கழித்து வருகிறார். பிகினி ஆடையில் முகம் நிறைய சிரிப்புடன் 'நீ அழகு கோவா' என்ற கேப்ஷனுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவிற்கு மட்டுமே 21 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன.
கணவர் நாகசைதன்யாவுடனான பிரிவை அறிவித்த பிறகு இப்போதுதான் வெளியில் சுற்றுலா கிளம்பியுள்ளார். கடந்த வாரத்தில் கேரளா சென்றவர், அப்படியே கோவா சென்றிருக்கிறார்.
சமந்தா நடித்து அடுத்து தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படமும், தெலுங்கில் 'சாகுந்தலம்' படமும் வெளிவர உள்ளது. தற்போது 'யசோதா' என்ற படத்தில் சமந்தா நடித்து வருகிறார். சில படங்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.