'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் நுழைந்து பிசியாக நடித்து வரும் சில நடிகைகளில் பூஜா ஹெக்டேவும் ஒருவர். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே தனது உடற்பயிற்சி, சுற்றுலா, படப்பிடிப்பு உள்ளிட்ட தன்னை பற்றிய பல விஷயங்களையும் பகிர்ந்து கொண்டு வருகிறார். படங்களில் நடிக்கும் நேரங்கள் தவிர்த்து மீதி நேரங்களில் புத்தகம் படிப்பதற்கு செலவிடும் பூஜா ஹெக்டே, சமீபத்தில் சல்லி ரூனே என்கிற எழுத்தாளர் எழுதிய நார்மல் பீப்பிள் என்கிற நாவலை வாசித்துள்ளார்.
அந்த நாவல் குறித்து அவர் கூறும்போது, “ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டும்போது இந்தப்புத்தகம் உங்கள் இதயத்தை உடைத்து விடும். குறைபாடுள்ள கதாபாத்திரங்கள், சுவாரஸ்யமான எதிர்மறை கதாபாத்திரங்கள்.. வாவ்” என கூறியுள்ளார். ஆனால் இந்த நாவலை வாசித்து முடித்தவுடன் சோகமாகி விட்டார் பூஜா ஹெக்டே. புத்தகத்தை கையில் வைத்தபடி சோகமாக படுத்திருக்கும் தனது புகைப்படத்தையும் சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே.