'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டிவியில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்து முன்னணி நாயகனாக உயர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். அவர் வருவதற்கு முன்பே முன்னணி நாயகர்களாக இருந்த சிலரை தனது வெற்றிகள் மூலம் ஓவர்டேக் செய்துவிட்டார். அதோடு அவர்களது சம்பளத்தை விடவும் அதிகமாக வாங்குகிறார் என்பது கோலிவுட் வட்டாரத் தகவல்.
தற்போது நடித்து வரும் 'டான்' படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்தை 'ஜதி ரத்னலு' என்ற தெலுங்குப் படத்தை இயக்கிய அனுதீப் இயக்க உள்ளார். இப்படம் சிவகார்த்திகேயனின் 21வது படமாக உருவாக உள்ளது.
இந்தப் படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் 35 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழில் சிவகார்த்திகேயன் 30 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம். 21வது படம் தமிழ், தெலுங்கில் தயாராக உள்ளதால் 35 கோடி சம்பளம் என்கிறார்கள். இப்படத்தில் முன்னணி கதாநாயகி ஒருவர் நடிக்கப் போகிறாராம்.
விஜய், தனுஷ் ஆகியோரைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனும் தமிழ், தெலுங்கு என்ற கான்செப்டில் நுழைய உள்ளார்.