Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மருதநாயகம் - கமல்ஹாசனை ஈர்த்தது எப்படி ?

18 அக், 2021 - 13:10 IST
எழுத்தின் அளவு:
Kamals-Marudhanayagam-inspiration

தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கமல்ஹாசனால் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டு பின் கைவிடப்பட்ட படம் மருதநாயகம். இங்கிலாந்து ராணி எலிசெபத் சென்னைக்கு வந்து இப்படத்தைத் துவக்கி வைத்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்தப் படம் அத்துடன் நின்றுவிட்டது. அந்தப் படம் மட்டும் முழுமையாக உருவாகி வெளிவந்திருந்தால் பாகுபலி படங்களுக்கு முன்பே தமிழில் ஒரு பெரும் சரித்திர சாதனை நிகழ்ந்திருக்கும்.

மருதநாயகம் படத்தை எடுக்க கமல்ஹாசனுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது வானமாமலை எழுதிய தமிழர் நாட்டுப்பாடல்கள் என்ற புத்தகத்தில் இடம் பெற்றிருந்த கான்சாகிபு சண்டை என்ற பாடல் என்பது பிக் பாஸ் 5 மூலமாக வெளிவந்துள்ளது. நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்தப் புத்தகம் பற்றி அறிமுகப்படுத்திய போது அது பற்றி கமல்ஹாசன் பகிர்ந்து கொண்டார்.




“தமிழ்ல ஒரு கமர்ஷியல் சினிமா எடுக்கணும்னு கதை தேடிய போது, ஒரு சின்ன கிணறு, நம்ம தாகத்துக்கு வெட்டிக்கலாமேன்னு ஆரம்பித்த போது, கான்சாகிபு சண்டை என்ற ஒரு புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. அந்த கிணற்றுக்குள்ளிருந்து பூதாகரமான ஒரு சரித்திர உருவம் எழுந்து நின்றது. அந்த உருவத்திற்குப் பெயர் தெரிந்தது. என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக, நான் கிட்டத்தட்ட ஒழுங்கா காலேஜிக்குப் போய் படிச்சிருந்தால் கண்டிப்பா அதுல ஒரு பி.எச்டி எழுதியிருப்பேன் நான்.

அந்த அளவிற்கு அந்த மனிதரைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், பேசவும் முடிகிறது என்றால், அதற்கு ஆரம்ப விதை கான்சாகிபு சண்டை என்ற அந்த நாட்டுப்பாடல். அதிலிருந்து எழுந்த கதாநாயகன் பெயர் முகம்மது யூசுப் கான், அல்லது மருதநாயகம் என்ற தமிழ் வீரன்,” என்றார்.

மேலும், தேவர் மகன் படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான இஞ்சி இடுப்பழகா...பாடலில் அந்த வார்த்தையும் மற்றும் மறக்க மனம் கூடுதில்லையே என்ற வரிகளையும் நாட்டுப்புறப் பாடல்களில் நான் படித்தது. வாலி அவர்களிடம் நான் ரசித்தது என்று சொன்னேன். அவரும் ஏறு தழுவுதல் போன்று அதையும் அரவணைத்துக் கொண்டு அந்தப் பாடலில் இந்த வார்த்தைகளை இடம் பெற வைத்தார்,” என்றார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
அண்ணாத்த டிரெய்லர் எப்போது?அண்ணாத்த டிரெய்லர் எப்போது? எம்ஜிஆர் தொடங்கிய கட்சி எவ்வளவு புயல் அடித்தாலும் தாங்கும்: லதா பெருமிதம் எம்ஜிஆர் தொடங்கிய கட்சி எவ்வளவு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

mukundan - chennai,இந்தியா
19 அக், 2021 - 17:57 Report Abuse
mukundan அப்போவே கமல் அரசியல் ஆரம்பிச்சுட்டார். நமக்கு தான் அப்போ புரியலை. அது என்ன ஹிந்து என்றால் கெட்டவன் (ஹே ராம்), முஸல்மான் என்றால் நல்லவன் (மருதநாயகம்) என்ற அப்போவே அவர் முடிவு செய்து விட்டார்.
Rate this:
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
19 அக், 2021 - 13:29 Report Abuse
திரு.திருராம் நடுவுல கட்டுமரத்தோட அழக பாத்தீங்களா? இரண்டுபக்கமும் உள்ள இரண்டு சிறுபான்மைக்கும் காவலன் போஸ் சூப்பர்,,,
Rate this:
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
19 அக், 2021 - 13:25 Report Abuse
திரு.திருராம் நல்லவேளை படம் வராமலேயே நாசமாய்ப் போனது,,,,
Rate this:
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
19 அக், 2021 - 11:56 Report Abuse
Paraman இந்த அரைவேக்காட்டின் தற்போதைய பீட்டர் இது. பிரேவ்ஹார்ட் என்ற ஹாலிவுட் படம் மெல்கிப்சன் நடிப்பு, இயக்கத்தில் ஸ்காட்லாந்து போராளி வில்லியம் வாலஸின் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்களை பற்றி வியக்கத்தக்க வகையில் எடுக்கப்பட்டு உலகெங்கும் சக்கை போடு போட்டது. ஆஸ்கரும் வென்றது. இதை கண்டு அது போலவே காப்பி அடித்து எடுக்க தொடங்கி பலபேருக்கு தலையில் மிளகாய் அரைத்து, வெளிநாட்டு நிதி கிடைப்பதாக பீலா விட்டு RBF., ABF., மற்றும் பெண்டாபோர் என்ற கணினி நிறுவனங்களை மூட வைத்த பெருமையை உலக்கை பெற்றது, இப்போது பல பேருக்கு மறைந்திருக்கும் என்று இந்த புது பீலா மானங்கெட்ட பிறவி
Rate this:
ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் ஒரு சாதாரண நடிகன் , அதுவும் தமிழ் நடிகன் தன் தமிழ் பட தயாரிப்பிற்கு ஒரு நாட்டின் ராணி யை அழைத்து வருகிறான் என்றால் அது எப்படி முடியும் ?
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in