தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த 2014ல் மலையாளத்தில் வெளியான 'இதிகாசா' படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. மிகப்பெரிய அறிமுகமில்லாத நடிகர்களை வைத்து அறிமுக இயக்குனர் பினு இயக்கிய இந்தப்படம் வெற்றி பெற்றதற்கு காரணம் இந்தப்படத்தின் வித்தியாசமான கதை தான்.
புராண காலத்தில் இருந்த இரண்டு மாய மோதிரங்கள் நிகழ்காலத்தில் ஒரே நேரத்தில் முன்பின் அறிமுகமில்லாத ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் விரல்களுக்கு வந்து சேர்கிறது. மோதிரத்தின் சக்தியால், இருவருக்குமான ஆண், பெண் தன்மை மட்டும் இடம் மாறிவிடுகிறது. அதன்பின் நிகழும் குழப்பங்களை சுவாரஸ்யமாக படமாக்கி இருந்தார்கள்.
இந்தப்படம் வெளியாகி இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில் இதன் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பினு. முதல் பாகத்தில் அறிமுக நடிகர் டாம் சாக்கோ நடித்திருந்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடிகர் இந்திரஜித் நடிக்கிறார். இவர் அடுத்து தமிழில் வெளியாக உள்ள நரகாசூரன் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.