பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாள நடிகர் கலாபவன் மணியின் திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மரணத்தில் உள்ள மர்மம் இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. கலாபவன் மணியை வைத்து 13 படங்கள் இயக்கியுள்ள இயக்குனர் வினயன், சில மாதங்களுக்கு முன் கலாபவன் மணியின் வாழ்க்கையை 'சாலக்குடிக்காரன் சங்காதி' என்கிற பெயரில் படமாக எடுக்கபோவதாக அறிவித்தார்.
இந்நிலையில் விரைவில் அந்தப்படத்தின் படப்பிடிப்பை துவக்க இருக்கிறார் இயக்குனர் வினயன். கலாபவன் மணி சாலக்குடியை சேர்ந்தவர் என்பதும் அவர் சினிமாவுக்குள் நுழையும் முன் சாலக்குடிக்காரன் சங்காதி என்கிற பெயரில் ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் ராஜாமணி என்பவரை கலாபவன் மணி கேரக்டரில் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார் வினயன்.