‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கடந்த டிசம்பர் மாதம் மலையாளத்தில் வெளியான 'மாயநதி' படம் கிறிஸ்துமஸ் ரிலீஸ் படங்களிலேயே அதிக வரவேற்பை பெற்றது.. இந்தப்படத்தை பிரபல இயக்குனர் ஆஷிக் அபு இயக்க, வளர்ந்துவரும் இளம் நாயகன் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமி நடித்திருந்தார்.
காதல் கதைகளிலேயே இது புதுமாதிரியான திரைக்கதை பாணியில் சொல்லப்பட்டிருந்த விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. திரையுலகினர பலரின் பாராட்டையும் பெற்றது. தற்போது இந்தப்படம் வெளியாகி 75வது நாளை தொட்டுள்ள நிலையில் நடிகர் மோகன்லால் தனது முகநூல் பக்கத்தில் இந்தப்படத்திற்கு பாராட்டு பத்திரம் எழுதியுள்ளார்.
“சமீபத்தில் தான் இந்த படத்தை பார்த்தேன். மனம் திறந்து சொல்ல வேண்டுமென்றால் உண்மைக்கு பக்கத்தில் இருந்து அழகாக நெய்யப்பட காதல் கதை தான் இந்த 'மாயநதி'. 75வது நாளை கொண்டாடும் படக்குழுவினருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார் மோகன்லால்.