டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள திரை உலகில் வில்லன், குணச்சித்திர மற்றும் கதையின் நாயகன் என மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் வில்லன்களில் ஒருவராக கொஞ்ச நேரமே வந்து போகும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேசமயம் தன்னை அந்தப்படத்தில் மோசமாக காட்டியதற்காக இயக்குனர் நெல்சன் மீது விமர்சனங்களையும் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான தசரா படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருந்தார் ஷைன் டாம் சாக்கோ. இதில் இவரது வில்லத்தனம் கலந்து நடிப்பிற்கு ரசிகர்களிடம் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.
இந்த நிலையில் மலையாளத்தில் அடி என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் ஷைன் டாம் சாக்கோ. இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளின்போது ஒரு பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கூறும் போது தானும் தனது மனைவியும் பிரிந்து வாழ்வதாக கூறியுள்ள ஷைன் டாம் சாக்கோ தனது ஏழு வயது மகன் அவனது தாயிடம் தான் வளர்கிறான் என்கிற தகவலையும் கூறினார்.
அது மட்டுமல்ல கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தால், அதன்பின்னர் குழந்தைகள் யாரோ ஒருவரிடம் மட்டும் தான் வளர வேண்டும். அவர்கள் அந்த ஒருவரது பக்கத்துக் கதையை மட்டுமே கேட்டு வளர்ந்தாலும் தப்பில்லை. அங்கே பத்து நாள், இங்கே பத்து நாள் என மாறி மாறி குழந்தைகள் வளரும்போது தேவையில்லாமல் அவர்கள் குழப்பத்திற்கு ஆளாவார்கள். அம்மா அப்பா இருவரின் வார்த்தை தாக்குதல்களுக்கும் ஆளாவார்கள். அதற்கு பதிலாக யாரோ ஒருவரிடம் தொடர்ந்து வளர்வதுதான் குழந்தைகளுக்கு நல்லது” என்று கூறியுள்ளார் ஷைன் டாம் சாக்கோ.