தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா, ஆபாச வீடியோக்கள் தயாரித்து அதனை மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்து பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது தாயார் இருவர் மீது புதிதாக மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லக்னோ காவல் நிலையத்தில் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது தாயார் சுனந்தா இருவர் மீதும் 2 தனித்தனி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஷில்பா ஷெட்டி சில ஆண்டுகளுக்கு முன்னர் 'லோசிஸ் வெல்னஸ் சென்டர்' என்ற பெயரில் நாடு முழுவதும் பிட்னஸ் சென்டர்(உடற்பயிற்சி மையம்)களை திறந்தார். இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் இந்த சென்டர்களை திறக்க பலரிடம் கோடிக்கணக்கில் ஷில்பா ஷெட்டி பணம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.
அதன் பிறகு அந்த தொழிலை மூடிவிட்டார். லக்னோவை சேர்ந்த ஜோத்ஜனா சவுகான், ரோகித் வீர் சிங் ஆகியோர் நடிகை ஷில்பா ஷெட்டியிடம், பிட்னஸ் சென்டர் கிளைகளை தொடங்க கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகவும், ஆனால் கிளைகள் தொடங்கப்படவும் இல்லை, அதோடு ஷில்பாஷெட்டி பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஷில்பா ஷெட்டிக்கும் அவரது தாயார் சுனந்தாவுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ஷில்பா ஷெட்டி நடத்திய அந்த நிறுவனத்தில் ஷில்பா தலைவராகவும், அவரது தாயார் இயக்குநராகவும் இருந்தனர். எனவேதான் இரண்டு பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக லக்னோ கிழக்கு பகுதி டிஜிபி சஞ்சீவ் அளித்த பேட்டியில், ''நடிகை ஷில்பா, அவரின் தாயாரிடம் விசாரணை நடத்த விசாரணை அதிகாரி மும்பை செல்ல இருக்கிறார். இவ்வழக்கு அனைத்து கோணத்திலும் விசாரிக்கப்படும். முக்கிய பிரமுகர் இவ்வழக்கில் தொடர்பு கொண்டு இருப்பதால் விசாரணை தீவிரமாக கவனிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.