சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? | நாளைய படங்களின் வெளியீட்டில் ஒரு அபூர்வம் |
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தனது தர்மா புரொடக்சன்ஸ் சார்பில் படங்களை தயாரித்தும் மற்ற படங்களை வாங்கி வெளியிட்டும் வருகிறார். குறிப்பாக லைகா நிறுவனத்துடன் இணைந்து பயணிக்க விரும்பிய கரண் ஜோஹர், லைகா தயாரித்த 2.0 படத்தை இந்தியில் வெளியிட்டார். இந்நிலையில் தற்போது லைகாவிடம் இருந்து ஒதுங்கி, ஜியோ நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து கொண்டுள்ளார் கரண் ஜோஹர். இதனால் லைகா நிறுவனம் டென்சன் ஆனதாக தெரிகிறது.
தற்போது அக்சய் குமார் நடித்து வரும் ராம் சேது படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக லைகா நிறுவனம், தன்னை இணைத்துக் கொன்டதே கரண் ஜோஹர் சொல்லித்தானாம். ஆனால் அவர் தங்களிடமிருந்து விலகியதால், தற்போது ராம்சேது பட மெயின் தயாரிப்பளருக்கு பணம் தருவதை நிறுத்தி வைத்திருக்கிறதாம் லைகா. இதனால் அக்சய் குமாருக்கு கொடுக்கப்பட்ட 30 கோடி ரூபாய் செக் ஒன்று, வங்கியிலிருந்து பணமில்லாமல் திரும்பி வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.. ஆனால் அக்சய் குமார் தரப்பிலோ, அப்படியெல்லாம் எதுவும் இல்லை என மறுக்கிறார்களாம்.