'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அமீர்கான் நடிப்பில் உலகம் முழுக்க வெளியாகி வசூலை குவித்த படம் 'தங்கல்'. இந்த படத்தில் அமீர்கானின் மூத்த மகளாக நடித்தவர் பாத்திமா சனா ஷேக். அந்த படத்திற்கு பின், அமீர்கானுடன் சேர்ந்து 'தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்' என்ற படத்திலும் நடித்தார்.
'தக்ஸ் ஆப் இந்துஸ்தான்' படத்தில் அமீர்கானின் பரிந்துரையாலேயே, பாத்திமாவுக்கு வெயிட்டான கதாபாத்திரம் கிடைத்ததாக நினைத்த நடிகை கேத்ரீனா கைப் கடுப்பாகி சண்டை போட்டதாக தகவல் பரவியது.
இதையடுத்து, பாத்திமா சனா ஷேக்கிற்கும், அமீர்கானுக்கும் இடையே காதல் என்று பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. இந்த காதலால் ஆமீர்கானுக்கும், அவரின் மனைவி கிரண் ராவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகவும் கூட செய்திகள் பரவின. ஆனால் அமீர்கான் இதுபற்றியெல்லாம் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை.
அமீர்கானுடனான காதல் குறித்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் பாத்திமா சனா ஷேக் இப்படி குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது :
என்னையும், அமீர்கானையும் வைத்து கிளம்பியிருக்கும் வதந்தி மிகவும் வித்தியாசமானது. என் அம்மா ஒருநாள், என்னிடம், 'பத்திரிகையில் உன் படம் போட்டு செய்தி இருக்கிறது' என்று சொல்லி, அந்த செய்தியையும் எனக்குக் காட்டினார். என்ன எழுதியிருக்கின்றனர் என்பதையும் சொன்னார். நான் கலங்கினேன், இந்த வதந்தி குறித்து, நானே விளக்க வேண்டும் என நினைத்தேன்.
'யாராவது உங்களை ஏதாவது குற்றம்சாட்டினால், முதல் உள்ளுணர்வு வெளியே வந்து இதுபோன்று ஏன் நினைக்கிறீர்கள் என்று கேட்க வேண்டும். நீங்கள் ஒரு கோபக்கார நபராக இருந்தால், நீங்கள் அவரை தாக்குவீர்கள். நீங்கள் அமைதியானவராக இருந்தால் நீங்களும் அதைப்பற்றி பேசுவீர்கள்' என என் அம்மா கூறினார். நான் இந்த வதந்தியால் பாதிக்கப்பட்டேன். அதனால் இனி, இந்த விவகாரம் குறித்து நான் எதுவும் விளக்கம் அளிக்கப் போவது இல்லை.
இவ்வாறு அந்த பேட்டியில் பாத்திமா கூறியுள்ளார்.