இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் |
பம்பாய், காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் போன்ற தமிழ் படங்களிலும், ஏராளமான ஹிந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை சோனாலி பிந்த்ரே. இவர் தயாரிப்பாளர், கோல்டி பெல்லை கடந்த 2002ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்த சோனாலி, கடந்த ஜூலை மாதம், தான் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக அறிவித்தார்.
இதையடுத்து சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் சோனாலி. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பி உள்ளார் சோனாலி.
இதுப்பற்றி சோனாலியின் கணவர் கோல்டி கூறுகையில், சோனாலி பிந்த்ரே உடல்நலம் தேறி வருகிறார். மீண்டும் நோய் தாக்கினால் அதற்கு ஏற்றபடி சிகிச்சை மேற்கொள்ளப்படும். சோனாலி திடமான பெண். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன். அனைவரின் அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி என்றார்.