'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சண்டிகர், : கடந்த, 2015ல், தேரா சச்சா சவுதா அமைப்பு தலைவன், குர்மீத் ராம் ரஹிம் சிங் நடித்த, எம்.எஸ்.ஜி., திரைப்படம் வெளியீடு தொடர்பான வழக்கில், பிரபல பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார், பஞ்சாப் மாநில போலீசின், சிறப்பு விசாரணைக்குழு முன், நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.
பாலியல் பலாத்கார வழக்கில், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பஞ்சாபை சேர்ந்த, தேரா சச்சா சவுதா அமைப்பு தலைவன், குர்மீத் ராம் ரஹீம் சிங், 2015ல், எம்.எஸ்.ஜி., என்ற படத்தில் நடித்தார். .அந்த படத்தை வெளியிடுவதில் பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து, அப்போதைய பஞ்சாப் மாநில துணை முதல்வரும், அகாலி தளம் தலைவருமான, சுக்பீர் சிங் பாதலுடன், குர்மீத் ராம் ரஹீமை, மும்பையில் உள்ள தன் வீட்டில் சந்திக்க, பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார் ஏற்பாடு செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பான வழக்கை, பஞ்சாப் மாநில போலீசை சேர்ந்த, எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு விசாரணைக்குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில், தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, சண்டிகர் நகரில் உள்ள, பஞ்சாப் போலீஸ் தலைமையக வளாகத்தில் உள்ள, எஸ்.ஐ.டி., அலுவலகத்துக்கு சென்று, அக் ஷய் குமார் நேரில் விளக்கம் அளித்தார். அப்போது, தன் மீதான புகாரை, அவர் திட்டவட்டமாக மறுத்ததாக கூறப்படுகிறது.