பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே. தமிழில் காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த சோனாலிக்கு வாய்ப்புகள் குறைந்ததும், இயக்குனர் கோடிபெல்லை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார்.
43 வயதாகும் சோனாலி பிந்த்ரேவுக்கு மூன்றாவது நிலை புற்றுநோய் வந்துவிட்டது. இந்தியாவில் எடுத்துக் கொண்ட சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாததால் தற்போது அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். புற்று நோயுடன் அவர் தொடர்ந்து போராடி வருகிறார். கீமோ தெரபி சிகிச்சையால் அவரது தலைமுடிகள் உதிர்ந்து விட்டது.
மொட்டைத் தலையுடன் இருக்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ள சோனாலி, "நமது தோற்றம் அழகாக இருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசை. அழகு இல்லாவிட்டால் அது ஆழ்ந்த உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்போது மனம் தளர்ந்து விடாமல் மகிழ்ச்சியாக இருப்பதற்குரிய விஷயங்களை செய்ய வேண்டும், நம் தோற்றம் பற்றிய கர்வம் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது" என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து நடக்கும் கீமோ தெரபி சிகிச்சையில் தன் கண் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், சில நேரங்களில் பார்க்க முடியவில்லை என்றும் கூறியுள்ள சோனாலி, தற்போது கண் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.