அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் |
பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறினார். இதனால் நானா படேகர் தான் நடித்து வரும் படங்களில் இருந்து விலகிக்கொள்ள நேர்ந்தது. கன்னியமான நடிகர் என்று போற்றப்பட்ட நானா படேகர் மீது பாலியல் குற்றசாட்டு எழுந்தது பாலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த், நானா படேகருக்கு ஆதரவாகவும், தனுஸ்ரீ தத்தாவுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்தார். அதில் தனுஸ்ரீ தத்தா தவறான பெண் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் தனுஸ்ரீ தத்தா, ராக்கி சாவந்த் மீது 10 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் நடிகை ராக்கி சாவந்த், ஷீ டூ என்ற மூவ்மெண்டை தொடங்கியிருக்கிறார். இதுகுறித்து மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: தனுஸ்ரீ தத்தா ஒரு லெஸ்பியன். இதை அவரே என்னிடம் தெரிவித்திருக்கிறார். ஒரு முறை அவர் என்னை ரேவ் பார்ட்டிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் என்னுடன் லெஸ்பியன் உறவு கொள்ள முயன்றார். அவர் மட்டுமல்ல அவரது தோழிகளுடன் இணைந்து என்னை கூட்டு லெஸ்பியனுக்கு அழைத்தார்கள். அதற்கு நான் மறுத்தபோது நண்பர்களை வைத்து கூட்டு பலாத்காரம் செய்து விடுவதாக மிரட்டினார். இப்படிப்பட்ட தனுஸ்ரீ தத்தா, என் மீது வழக்கு போட்டிருக்கிறார். நான் அவர் மீது 50 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்போகிறேன்.