'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு |
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி பீக்கில் இருந்தபோது நடிகர் சல்மான்கானுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டவர்களில் ஒருவர். இருவரும் அடிக்கடி டேட்டிங் சென்று வருவார்கள் என்றுகூட சொல்லப்பட்டது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஷில்பா ஷெட்டி, சல்மான்கான் தனக்கு நல்ல நண்பராக இருந்தார் என்றும் அவருடன் டேட்டிங் சென்றதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் தனது தந்தைக்கும், சல்மான்கானுக்குமான நட்பை பற்றி குறிப்பிட்டு தன்னை சல்மான் கான் நெகிழவைத்த ஒரு சம்பவத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
படப்பிடிப்பு, அல்லது பார்ட்டிக்கு சென்றுவிட்டு வரும்போது ஷில்பாவை வீட்டில் இறக்கிவிடும் சல்மான், அவரது தந்தையுடன் பார் டேபிளில் அமர்ந்து சில பெக்குகளை உள்ளே தள்ளியபடி கொஞ்ச நேரம் பேசிவிட்டு செல்வாராம். ஷில்பாவின் தந்தை இறந்த செய்தி கேட்டதும், அவரது வீட்டிற்கு சென்ற சல்மான்கான் நேராக அந்த பார் டேபிளில் சென்று அமர்ந்துகொண்டு குலுங்கி அழ ஆரம்பித்து விட்டாராம். சல்மான்கான் பற்றிய நினைவு வரும்போதெல்லாம் இந்த நிகழ்வு மனதில் தோன்றி தன்னை நெகிழ வைத்து விடுகிறது என மேலும் கூறியுள்ளார் ஷில்பா ஷெட்டி.