ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் படங்களில் நடித்தவர் ஹிந்தி நடிகை சோனாலி பிந்த்ரே. பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர், இயக்குநரும் தயாரிப்பாளருமான கோல்டி பெஹல்லை 2002-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை படிப்படியாக குறைத்தவர், அவ்வப்போது டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வந்தார். தற்போது 43 வயதை எட்டியிருக்கும் சோனாலி பிந்த்ரேவுக்கு தீவிர புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். தனக்கு புற்றுநோய் இருப்பதை டுவிட்டர் மூலம் தெரிவித்திருக்கிறார் சோனாலி.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது... வாழ்க்கையில் சில நேரங்களில் எதிர்பாராதது திடீரென நடந்துவிடும். எனக்கு தீவிர புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். உடலில் திடீரென வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனை சென்று பரிசோதனை செய்தேன். அப்போது தான் இந்த நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்து வருகிறேன். இந்த நோயில் இருந்து மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு பக்கபலமாக எனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளனர்.
இவ்வாறு சோனாலி பிந்த்ரே பதிவிட்டிருக்கிறார்.