பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பிரபல இந்தி நடிகை மற்றும் மாடல் அழகி மீனாட்சி தபா. இவர் கடந்த 2012ம் ஆண்டு அவரது நண்பர்களாலேயே கடத்தி செல்லப்பட்டு அவரது பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டப்பட்டார். பணத்தை கொடுக்காததால் மீனாட்சி தபாவை படுகொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசினர். தவறான சகவாசத்தால் மீனாட்சிக்கு இந்த முடிவு ஏற்பட்டது.
இது தொடர்பாக மீனாட்சியின் நண்பர்கள் அமித்குமார், அவரது காதலி பிரீத்தி சுரின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி மீனாட்சியை அலகாபாத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், பின்பு கூலிப்படையை வைத்து அவரை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதையும் படுகொலை செய்ததையும் ஒப்புக்கொண்டனர். கடந்த 6 வருடமாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.