டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீதான மான் வேட்டை வழக்கில், அவர் குற்றவாளி என அறிவித்து 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் கோர்ட் இன்று (ஏப்.,05) தீர்ப்பு வழங்கி உள்ளது.
1998 ம் ஆண்டு அக்டோபர் 1 ம் தேதி வனப்பகுதியில் படப்பிடிப்பிற்காக சென்றிருந்த போது அவ்வழியாக சென்ற மானை வேட்டையாடி தனது ஜிப்சி வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சல்மான் சென்றதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சல்மான் கான், அவருடன் சென்ற சைப் அலிகான், தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சுமார் 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஜோத்பூர் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில், சல்மான் கான் குற்றவாளி என அறிவித்து அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சல்மான் கான் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணைக்கு நாளைக்கு வர இருக்கிறது.
சக நடிகர்களான சைப் அலிகான், தபு, சோனாலி, நீலம் ஆகியோர் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.