மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் நடிப்பில் ஜனவரி 25-ந்தேதி திரைக்கு வந்த படம் பத்மாவத். சஞ்சய்லீலா பஞ்சாலி இயக்கிய இந்த படத்தில் சர்ச்சைக்குரிய விசயங்கள் இருப்பதாக சொல்லி படத்தை வெளியிட வடமாநிலங்களில் பலத்த எதிர்ப்பு, போராட்டங்கள் வெடித்தன. அதனால் படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியாமல் ரிலீஸ் தேதியை மாற்றிக்கொண்டே வந்தனர். பின்னர், நீதிமன்றம் படத்தை வெளியிட அனுமதி அளித்ததை அடுத்து சில வட மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் பத்மாவத் படம் வெளியானது.
மேலும், சர்ச்சைக்குரிய படமாகி விட்டதால் இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே திரையிட்ட அனைத்து மாநிலங்களிலும் நல்ல வசூல் இருந்து வந்தது. அந்த வகையில், ஆந்திராவைப் பொறுத்தவரை 2 வாரங்களில் ரூ.20 கோடி வசூலித்துள்ள பத்மாவத் படம் தொடர்ந்து வசூலித்துக் கொண்டிருக்கிறது. இந்தியில் அமீர்கான் நடித்து ஆந்திராவில் வெளியான டங்கல் படம் 2 வாரங்களில் ரூ. 21.12 கோடி வசூலித்தது.
தற்போதைய நிலவரப்படி டங்கலை விட பத்மாவத் படத்தின் வசூல் குறைவாக இருந்தபோதும், பத்மாவத் படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடுத்த வாரத்தில் டங்கல் வசூலை முறியடித்து சாதனை செய்து விடும் என்கிறார்கள்.