ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது தந்தையும், நடிகருமான சத்ருஹன் சின்ஹாவுடன் மும்பை ஜூகு பகுதியில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இரண்டு மாடிகளை கொண்ட இந்த வீடு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 8 மாடிகளை கொண்ட வீடாக கட்டிமுடிக்கப்பட்டது. இதற்கு மும்பை மாநகராட்சியின் அனுமதியை பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் 8 மாடிக்கும் மேல் மாநகராட்சி அனுமதி இல்லாமல் கூடுதல் கட்டிடம் கட்டியதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது. இதுகுறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் அதை உறுதி செய்தனர். அனுமதியின்றி சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகளில் பூஜை அறை தவிர மற்ற பகுதிகளை இடித்து தள்ளினர். அதோடு சத்ருஹன் சின்ஹா மீது வழக்கு பதிவு செய்தனர். கட்டுமானத்தை இடித்தற்கான செலவை செலுத்துமாறு சத்ருஹன் சின்ஹாவுக்கு நோட்டீசும் அனுப்பி உள்ளனர்.