மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகிய இருவரும் சேர்ந்து தொழிலதிபர் ஒருவரிடம் 60 கோடி மோசடி செய்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்து அதுகுறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு தனது வழக்கறிஞர் மூலம் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார் ஷில்பா ஷெட்டி. ஆனால் அந்த மனுவை விசாரித்த நீதிபதி, அந்த 60 கோடியை டெபாசிட் செய்தால் அனுமதி தர பரிசீலிப்பதாக தெரிவித்தது.
இதற்கிடையே ஷில்பாவும் அவரது கணவரும் வெளிநாடு செல்ல அனுமதி கேட்ட மனுவை வாபஸ் பெற விரும்புவதாக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதை நீதிமன்றமும் ஏற்றது. எதிர்காலத்தில் வெளிநாடு செல்ல வேண்டியிருந்தால் மனு செய்வதாக இருவரும் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற கெடுபிடியால் ஷில்பாவும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ளனர்.