ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது அட்லீ இயக்கி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார் ஷாரூக். கடந்த 2021ல் மும்பையில் உள்ள கப்பல் ஒன்றில் போதை விருந்தில் கலந்து கொண்டார் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான். தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்தியதாக கூறி அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அதன் பிறகு இந்த விவகாரத்தில் அவர் குற்றமற்றவர் என கூறி நீதிமன்றம் அவரை விடுவித்தது.
ஆரியன்கான் விரைவில் இயக்குனராக அறிமுகமாக போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அவர் புதிதாக மதுபான பிசினஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார். இதனை விளம்பரப்படுத்தும் வகையில் சினிமா மற்றும் டிவி நடிகர் நடிகைகளுக்கு மும்பையில் அவர் ஒரு பார்ட்டி கொடுத்துள்ளார். அப்போது பல நடிகைகளுடன் ஆரியன்கான் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதைப்பார்த்து ஏற்கனவே போதை பொருள் வழக்கில் சிக்கிய ஆரியன்கானுக்கு இதுபோன்ற சரக்கு பிசினஸ் தேவையா? என்கிற கேள்விகளும் சோசியல் மீடியாவில் அவரை நோக்கி எழுந்து கொண்டிருக்கிறது.