அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நடிகர் விஜய் முதல்முறையாக தெலுங்கில் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை தயாரித்து உள்ளவர் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு. சில நாட்களுக்கு முன்பு துணிவு படத்தை விட வாரிசு படத்திற்கு தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்களில் ஒதுக்க வேண்டும் என இவர் தெரிவித்த கருத்தும், விஜய் தான் நம்பர் ஒன் என்று இவர் கூறியதும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தின. அதேபோல தெலுங்கிலும் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா ஆகியோரின் படங்கள் சங்கராந்தி பண்டிகைக்கு வெளியாக உள்ள நிலையில் வாரிசு படத்திற்கு அதிக தியேட்டர்கள் கேட்டு வற்புறுத்துகிறார் என்பதாலும் இவர் மீது தெலுங்கு திரை உலகிலும் பலர் வருத்தத்தில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தில் ராஜு, இதுவரை நான் தெலுங்கில் பல ஹீரோக்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். ஆனால் ஒருவர் கூட எனக்கு ஒரு கப் காபி கொடுத்தது கிடையாது. ஆனால் விஜய்யை சந்திக்க சென்றபோது அவர் தனது கைகளில் இரண்டு காபி கோப்பைகளுடன் வந்து அதில் எனக்கு ஒன்றை தந்து உபசரித்தார். அதனால் தான் அவர் சினிமாவிலும் சினிமாவை தாண்டியும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்று பாராட்டியுள்ளார். இவர் விஜய்யை உயர்த்தி பேசுவதற்காக ஒரு மிகப்பெரிய விழா மேடையில் இப்படி தெலுங்கு நடிகர்களை குறை சொல்லி இருப்பது மீண்டும் தெலுங்கு திரை உலகை சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.