மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மலையாள திரையுலகில் வளர்ந்துவரும் இளம் நடிகராக இருப்பவர் நடிகர் ஸ்ரீநாத் பாஷி. கடந்த பத்து வருடங்களாக படிப்படியாக முன்னேறி ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ள இவர், கதாநாயகனாக நடித்துள்ள சட்டம்பி என்கிற திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. அந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது அதன் தொகுப்பாளினி கேட்ட கேள்விகளால் கோபமடைந்து அவரை அநாகரிகமான வார்த்தைகளால் ஸ்ரீநாத் பாஷி திட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து தொகுப்பாளினியும் சம்பந்தப்பட்ட சேனல் நிறுவனமும் போலீசில் புகார் அளித்ததின் பேரில் ஸ்ரீநாத் பாஷி போலீசாரால் கைது செய்யப்பட்டு பின் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்த நிலையில் அவர் மீது தயாரிப்பாளர் சங்கம் தற்காலிக தடை விதித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அவர் தற்போது நடித்து வரும் படங்களில் நடித்து முடித்த பின்பே அவர் மீதான தடை நீக்கம் குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க இவர் நடித்துள்ள சட்டம்பி திரைப்படத்தில் தற்போது வெளியிடப்படும் போஸ்டர்களில் இவரது படம் இல்லாமலேயே வெளியாகி வருகின்றன.. பட தயாரிப்பாளரின் இந்த செயலுக்கு ஒருபக்கம் ஆதரவு இருந்தாலும் இன்னொரு பக்கம் ஸ்ரீநாத் பாஷிக்கு ஆதரவாக இதுகுறித்து கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.