'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சல்மான்கான், ஆமீர்கான் ஆகியோருக்கு அடுத்தடுத்து தன் வீட்டில் விருந்து கொடுத்துள்ளார் 'ஆர்ஆர்ஆர்' நடிகரான ராம் சரண். சல்மான்கான் தற்போது தன்னுடைய 'கபி ஈத், கபி தீவாளி' ஹிந்திப் படத்திற்காக ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தார்.
அப்படத்தின் நாயகி பூஜா ஹெக்டே, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் ராம் சரண் வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொண்டனர். அவர்களை ராம்சரண், அவரது மனைவி உபாசானா ஆகியோர் வரவேற்று விருந்தளித்தனர். இது மூன்று தினங்களுக்கு முன்பு நடந்துள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்பு நடிகர் சல்மான் கான் அது போல ராம்சரண் வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளார். அடுத்தடுத்து சல்மான், ஆமீர் ஆகியோருக்கு தனது வீட்டில் விருந்தளித்தது குறித்து ராம்சரண் மனைவி புகைப்படங்களுடன் இன்ஸ்டாவில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திப் பகிர்ந்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசனை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தார் ராம்சரணின் அப்பா நடிகர் சிரஞ்சீவி. அதில் நடிகர் சல்மானும் கலந்து கொண்டார்.