தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவரது கணவர் ராஜ்குந்த்ரா. ஆபாச படங்கள் தயாரித்து அதை விநியோகம் செய்து வந்த வழக்கில் இவரை மும்பை போலீசார் ஜூலை மாதம் 19ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து செப்டம்பர் 20ம் தேதி அவர் ஜாமீனில் விடுதலையானார். தொடர்ந்து வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் பாலிவுட் கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா கடந்த 14ம் தேதி மும்பை ஜுஹு பகுதி காவல் நிலையத்தில் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரின் கணவர் ராஜ் குந்த்ரா மீது புகார் அளித்தார். அவர்கள் தன்னை ஏமாற்றியதுடன், மனதளவில் பாலியல் தொல்லை தருவதாக தனது புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகாரை பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் 50 கோடி ரூபாய் கேட்டு ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் ஷெர்லின் சோப்ரா மீது மும்பை நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். பொய்யான புகார் கூறி தங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியிருக்கிறார்கள்.