தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் தங்களுக்கென தனி பாதையை உருவாக்கிக் கொள்ள நினைப்பவர்கள் ஓரளவிற்கு முன்னேறிவிடுவார்கள். ஆனால், அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டு அவர்களைப் போலவே தாங்களும் வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் தடுமாறித் தேங்கிவிடுவார்கள்.
ஆனந்தமாய் திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தாலும் அகலக் கால் வைத்ததால் மிகப் பெரும் கடனாளியாகி, தன் சொந்த அலுவலகத்தைக் கூடப் பறிகொடுத்தவர் அந்த சாமி இயக்குனர். அவருக்கும் சங்கத் தலைவர் நடிகருக்கும் சண்டை முடிந்து ஒரு வழியாக இரண்டாவது கோழி படத்தை முடித்துவிட்டார்கள்.
வர உள்ள படங்களில் இந்தப் படமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது நிஜம். படத்தின் வெளியீட்டுத் தேதியையும் குறித்துவிட்டார்கள். ஆனாலும், படம் திட்டமிட்டபடி வருமா என்பது சங்கத் தலைவருக்கும் மேல் உள்ள பஞ்சாயத்து ஆட்களிடம்தான் உள்ளதாம். சாமி இயக்குனர் அவருடைய முந்தைய பல கோடி பாக்கிப் பணத்தை செட்டில் செய்தால் மட்டுமே இரண்டாவது கோழி சரியான சமயத்தில் வரும் என்கிறார்கள்.
சங்கத் தலைவரா, பஞ்சாயத்து ஆட்களா என்ற பஞ்சாயத்து விரைவில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.