அன்புக்கு நான் அடிமை படத்தில் அறிமுகமானவர் கராத்தே மணி. ரங்கா படத்திலும் ரஜினியுடன் இணைந்து நடித்தார். முறைப்படி கராத்தே கற்று அதில் பிளாக்பெல்ட் வாங்கி சினிமாவுக்கு வந்தவர் கராத்தே மணி. அவரது வித்தியாசமான வில்லன் குரல் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. அகால மரணம் அடைந்த கராத்தே மணி சிறிது காலமே சினிமாவில் இருந்தார். தற்போது அவரது மகன் திரிசூல் "பிரமுகர்" என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடி புதுமுகம் நித்யா. இன்றைய இளைஞர்கள் தவறான அரசியலுக்குள் இறங்கி தங்கள் வாழ்க்கையை எப்படி சீரழித்துக் கொள்கிறார்கள் என்பதுதான் கதை. விஜயகாந்த் நடித்த "சுதேசி" படத்தை இயக்கிய ஜேப்பி அழகர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் இது.