Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வந்த படங்கள் »

அட்டு

அட்டு,Attu
  • அட்டு
  • இயக்குனர்:
02 ஏப், 2017 - 09:37 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » அட்டு

ஸ்டுடியோ - 9 ஆர்.கே சுரேஷ் வெளியிட , ட்ரீம் ஐக்கான் பிலிம் புரொடக்ஷன் எஸ். அன்பழகன் தயாரிப்பில் ரத்தன் விங்கா எழுத்து , இயக்கத்தில் புதுமுகங்கள் ரிஷி ரித்விக் - அர்ச்சனா ரவி ஜோடியுடன் ., யோகி பாபு , தீனா , பிரபு , ராஜசேகர் ஆகியோர் நடிக்க ,"விணைவிதைத்தவன், விணை அறுப்பான்." எனும் கருத்தை கருவாக கொண்டு வட சென்னை தாதாயிஸ பின்னணியில் வந்திருக்கும் படமே "அட்டு ".


தாதாயிஸத்துக்கு பேர் போன வட சென்னை பகுதியில்., பத்து, பனிரெண்டு வயதிலேயே தனக்கு பிடித்த ரவுடிக்காக அவரது பகையாளி ரவுடியை குத்திக் கொன்று விட்டு சில, வருடங்கள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி சிறைபோய் திரும்பும் அநாதை அட்டு ., மற்றவர்கள் வாசம் செய்ய தயங்கும் அப்பகுதியின் ஒதுக்குபுறமான குப்பை கழிவுகள கொட்டப்படும் பகுதியிலேயே சகாக்களுடன் , சந்தோஷமாக வசிக்கிறார். சிறிய அளவிலான அடிதடி மேட்டர்கள் , சின்ன கத்திக் குத்துக்கள், கட்டப் பஞ்சாயத்துக்கள் , ... என தன்னை அப்பகுதி தாதாவாக காட்டிக் கொள்ளும் அட்டு மீது ., சிறு வயதில் நான்கு பிஞ்சில் பழுத்த சிறுவர் களிடமிருந்து தன் மானத்தை காத்தவன் ... எனும் கூடுதல் தகுதிக்காக ஒரு தலைக்காதலில் இருக்கிறார் அப்பகுதியில பக்கோடா வியாபாரம் செய்யும் மாற்று திறனாளியின் மகளான நாயகி சுந்தரி .


அட்டு விற்கும் அவர் மீது காதல் வரும் வேளையில் ., அப்பகுதியில் போதை மருந்து வியாபரம் செய்யும் பக்கத்து ஏரியா தாதா ஜெயா., ஒரு நாள் போலீஸ் துரத்தலில் ., போலீஸுக்கு பயந்து குப்பை லாரியில் போட்டு அனுப்பிய பல கோடி மதிப்புள்ள போதை பொருட்கள்., அட்டுவின் வசம் சிக்க ., அதை வைத்துக் கொண்டு ஆட்டம் காட்டும் அட்டு வையும் அவரது நண்பர்களையும் போட்டுத்தள்ளி, தன் சரக்கை கைப்பற்ற களம் இறங்குகிறார் ஜெயா.


ஜெயாவிடமிருந்து அட்டு தப்பி பிழைத்தாரா ? காதலி சுந்தரியை மணம் முடித்தாரா ...? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வட சென்னை பாஷையில், சற்றே பழைய பாணியில் விடை சொல்ல முற்பட்டிருக்கிறது "அட்டு " படத்தின் கதையும், களமும்!


அட்டு பாத்திரத்தில் , அழுக்கான குப்பை மேட்டுவாசியாக வாழ்ந்து , நார்த் மெட்ராஸ் ரவுடிகளை நம் கண் முன் நிறுத்த முயன்று அதில் பாதி வெற்றியும் பெற்றிருக்கிறார் அறிமுகம் ரிஷி ரித்விக் ரவுடிக்கும் நல்லக்காதல், நல்ல நட்பு ,ஈர மனசு , , விவேகம், வெட்கம் ,மானம் ..எல்லாம் உண்டு ....என தன் நடிப்பில் காட்டியிருக்கிறார் ரிஷி. ஆனால் குப்பை மேட்டு கோழியாகவே கடைசி வரை அவர் வாழ்ந்து மடிவது வருத்தம் . கதாநாயகியாக அட்டு மீது அப்படி ஒரு அசாத்திய காதல் கொண்டிருக்கும் சுந்தரியாக., மாற்றுத்திறனாளி பக்கோடா வியாபாரியின் மகளாக புதுமுகநாயகி அர்ச்சனா ரவி, வித்தியாசமாக இருக்கிறார். ஒரு மாதிரி நடை , உடை , பாவனையில் அட்டு வை கட்டி ஆடி , ஓடி , பாடி ...ரசிகனை அவர் வரும் சீன்களில் சீட்டோடு கட்டிப்போடுகிறார்.


அட்டுவின் சகாக்களில் சப்பையாக வரும் யோகி பாபு , வழக்கம் போல இன்ன சென்ட் காமெடி கேரக்டரில் கலக்கியிருக்கிறார். உளுவயாக பிரபு , தாலாக ராஜசேகர் மற்றும் போதை மருந்து விற்கும் தாதா ஜெயாவாக தீனா , ஆகிய எல்லோரும் வட சென்னை வாசிகளாக , தாதாக்களாக ரவுடிகளாக நடிக்கவில்லை வாழ்ந்திருக்கின்றனர். பைட் மாஸ்டர்ஸ் -பவர் பாண்டியன் - ஆசானின் அதிரடி கண்டை காட்சிகள் . அட்டு படத்திற்கு பலம் சேர்க்க முயற்சித்திருக்கின்றன. எடிட்டர் .எல்.வி .கே தாஸின் படத்தொகுப்பு பக்காவும் அல்ல , பாடாவதியும் அல்ல ... என சொல்லத்தான் ஆசை .ஆனால் சில , அழுக்கு இழுவை காட்சிகள் அதற்கு தடை போடுகின்றன பாவம்.


காமிராமேன் ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு அழுக்கு வடசென்னையை அழகாக காட்டியிருக்கிறது . மியூசிக் டைரக்டர் -போபோ சசி யின் இசையில்., "டிங் டிங் டகானா ,டங் டங் டகானா ..." ,"ஒரக்கண்ணால் என்னை பார்த்தாலே ... " ,"வாழ்க்கை எனும் நாடகத்தில் ..."உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் மிரட்டல் , உருட்டல். .அதில் , "டிங் டிங் டகானா ,டங் டங் டகானா ..." குத்துப் பாடல் இசையமைக்கப் பட்டிருக்கும் விதமும்அதில் ஆடியுள்ள அயிட்டம் டான்ஸரின் ஆட்டமும் . அது ,படம் பிடிக்கப்பட்டிருக்கும் விதமும் ,செம் ம ... மிரட்டல் .ஹீ... ஹீ


டைரக்டர் -ரத்தன் விங்காவின் எழுத்து , இயக்கத்தில் , வட சென்னை பகுதியையும் அங்கு வாழும் மனிதர்களையும் வழக்கமாக தமிழ் சினிமாவில் காட்டியிருப்பது போலவே இப்படத்திலும் காட்டியிருப்பது பெரும் பலவீனம். அதே நேரம் ,வட சென்னை வாழ் இளைஞர்கள் சிலர் ., ரவுடியாக, தாதாவாக தங்கள் வாழ்க்கையை தொலைத்த விதத்தை , பக்காவாக படம் பிடித்தமை க்காக இப்பட இயக்குனரை பாராட்டலாம். ஹீரோ ,என்னதான் தாதா , சிறு வயதிலேயே பெருங்கொலை , கொள்ளை எல்லாம் செய்தவர் ... என்றாலும் இறுதியில் , அவருக்கு ஏற்படும் முடிவு படம் பார்க்கும் ரசிகனுக்கு பாடம்! ஆக மொத்தத்தில்,"அட்டு " படத்தை பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம் ... இல்லை , அந்த காசில் வட சென்னையை பைக்கில் அடித்து வரலாம் ரெண்டு ரவுண்டு !"



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in