நடிகர்கள் : ஷாகித் கபூர், ஆலியாபட், கரீனாகபூர், தில்ஜித் சிங்
இயக்கம் : அபிஷேக் சவுபே
சர்ச்சைகள் பல தாண்டி, தடைகள் பல கடந்து வௌிவந்திருக்கும் படம் தான் உட்தா பஞ்சாப்.
கதைப்படி, ராக்ஸ்டார் பாடகரான டாமி சிங் எனும் ஷாகித் கபூர், பீகார் பெண்ணான ஆலியா பட், போலீஸ் அதிகாரியான சரஜ்த் சிங் எனும் தில்ஜித் சிங், டாக்டரான பிரீத் எனும் கரீனா கபூர் ஆகிய நான்கு பேரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. ஆபாச பாடல்கள் பாடியே பிரபலமான பஞ்சாப் ராக் ஸ்டாரான ஷாகித் கபூருக்கு இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கிறது. கூடவே ஷாகித்தின் பாடல்களுடன் சேர்ந்து போதைக்கும் அடிமையாகி கிடக்கிறார்கள் பஞ்சாப் இளைஞர்கள்.
பீகார் பெண்ணான ஆலியாவிற்கு போதைப்பொருள் விற்றால் நிறைய சம்பாதிக்கலாம் எனும் ஆசை பிறக்க, அந்த தொழில் செய்கிறார். ஆனால் அவரை போதை பொருள் விற்கும் மற்றொரு கும்பல் கடத்தி செல்கிறது.
இதுஒருபுறம் இருக்க இன்ஸ்பெக்டரான தில்ஜித்தின் தம்பி போதைக்கு அடிமையாகி சீரழிய அவருக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டராக வருகிறார் கரீனா. தம்பியின் நிலையை பார்த்து கொதித்து எழும் தில்ஜித், தன் தம்பியை போன்று பல இளைஞர்கள் போதையால் சீரவழிதை தடுக்க களம் இறங்குகிறார். அவருக்கு துணையாக கரீனாவும் களம் இறங்குகிறார். போதையில் அடிமைப்பட்டு கிடக்கும் பஞ்சாப் இளைஞர்களை கரீனாவும், தில்ஜித்தும் மீட்டார்களா?, போதை கும்பலை சட்டத்திற்கு முன் நிறுத்தினார்களா.?, பஞ்சாப்பில் போதை ஒழிந்ததா.? என்பது உட்தா பஞ்சாப் படத்தின் மீதிக்கதை.
ஷாகித் கபூர், டாமி சிங் எனும் ராக் ஸ்டாராக வருகிறார். ஆனால் ராக் ஸ்டாராக அவர் ஜொலிக்கவில்லை. தில்ஜித், கரீனா இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் மூவரை காட்டிலும் படத்தின் பலமே ஆலியா பட் தான். படத்தில் அவரது நடிப்பு தான் கண்களுக்கு தெரிகிறது. தன்னுடைய கதாபாத்திரத்தை அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிறார்.
இயக்குநர் அபிஷேக் சவுபே, போதை பழக்கத்தை பற்றி தௌிவாக சொன்னவர், அதை தடுப்பது பற்றிய விஷயங்களை முழுமையாக சொல்லவில்லை. அதேசமயம் படத்தின் வசனங்கள் அனல் தெறிக்கிறது. இசை சுமார் ரகம் தான். ஆனால் படத்திற்கு பெரும் பலமே ஔிப்பதிவும், படத்தொகுப்பும் தான்.
போதைக்கு எதிரான விழிப்புணர்வு படமாக இப்படம் இருக்கும் என படக்குழுவினர் கூறியது உண்மையல்ல என்பது படம் பார்க்கும்போது தெரிகிறது. படத்தில் அதிகம் வரும் ஆபாச வார்த்தைகளும், அதிகப்படியான போதைக்காட்சிகளும் ரசிகர்களை முகம் சுழிக்க வைக்கிறது. போதை விழிப்புணர்வு படம் முழுநீள படமாக இல்லாமல் ஆவணப்படம் போன்று இருப்பது படத்தின் பலவீனம்.
மொத்தத்தில், 'உட்தா பஞ்சாப்' - குடும்பத்தோடு பார்க்கும் படம் அல்ல!