நாயகன் - ராம்
நாயகி - ராக்ஷி கண்ணா
இயக்குனர் - ஸ்ரீனிவாச ரெட்டி
காதலுக்கு உதவும் ஒர் இளைஞன், சிவா(ராம்) பெற்றோர்களின் எதிர்ப்பை மீறியும் பல காதலர்களுக்கு உதவுகிறான். நாயகி தனுவை(ராஷி கண்ணா) பார்த்தவுடன் அவள் மீது மையல் கொள்கிறான், அவளை தொடர்கிறான். காதலின் துரத்தலினால் அவள் பின் தொடர்ந்து தனு செல்லும் கிராமத்திற்கும் சிவம் செல்கிறான். எதிர்பாராத விதாமாக போஜி ரெட்டிக்கு (வினீத் குமார்) எதிரான ஒரு பெரும் பிரச்னையில் சிக்கிக் கொள்கிறான். இதே நேரத்தில் இன்னொரு வில்லனான அபி (அபிமன்யூ சிங்) தனுவை பார்த்து அழகில் மயங்கி, தனுவை தன் வசப்படுத்த அவளை கடத்துகிறான். அப்புறம் என்ன, பிரச்சனை தீர்ந்ததா? தனுவை சிவம் மீட்டானா? காதல் கை கூடியதா இல்லை என்பதே படத்தின் மீதிக்கதை..
ராம் தேர்ந்த நடிகராக படத்தை தாங்குகிறார், ராஷி கண்ணா அழகாக வந்து ரசிகர்களை வசீகரிக்கிறார். படத்தின் அனேக பகுதிகள் பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் கொடுக்கின்றன. சில பாடல்கள் மற்றும் தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்ணனி இசை படத்திற்கு பெரும் பலம். பிஷ் வெங்கட்டின் நகைச்சுவை காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. படம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடுகிறது. அத்தகைய நீளமான திரைக்கதைதான் படத்தின் பெரும் பிரச்சனை. சற்றே அதை தவிர்த்திருக்கலாம்.
அதுவும் படத்தின் முன் கதை சுருக்கமே நீளமாக இருப்பது துவக்கத்திலே ரசிகர்களின் பொறுமையை சோதித்து விடுகிறது. ஒரு சிறு நகரத்தை தேடி செல்லும் நாயகன் அங்கே வில்லனுடன் மோதல், சண்டையில் நாயகன் ஜெயிக்க சுபமாக முடியும் கதை. இன்னும் எத்தனை வருடத்திற்கு எடுக்க போகிறார்களோ இதை. அதிலும் அந்த ஆதி கால கிளைமேக்ஸ் வேறு. கொஞ்சம் அப்டேட் ஆகுங்க பாஸ் என்று சொல்ல வைக்கிறது.
ஒரு இயக்குனராக ஸ்ரீனிவாச ரெட்டி தன் முதல் படத்தை சற்று தொய்வானதாக எடுத்திருக்கிறார். அழகான காட்சிகள் நிறைய எழுதியிருக்கிறார் ஆனால் அதை சேர்ப்பதில் தான் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது..அடுத்த படத்தில் அதை தவிர்பார் என நம்புவோம். எடிட்டிங்கிலும் பாரபச்சம் பார்க்காமல் இருக்க வேண்டும். மொத்தமாக சிவம் பழக்கப்பட்ட கதை புது வண்ணப்பூச்சுடன் கண்ணை கவரும் படி எடுத்திருக்கிறார்கள். படத்தின் நேரம் ஒரு பொருட்டல்ல என நினைத்தால் நிச்சயம் இப்படத்தைப் பார்க்கலாம்.
சிவம் - மசாலா படம்!