நாயகன் - சாய் தரண் தேஜ்
நாயகி - ரெஜினா
இயக்குனர் -ஹரிஸ் ஷங்கர்
பணத்தை மட்டுமே பெரியதாக நினைக்கும் இளைஞன் சுப்ரமணியம் (சாய் தரண் தேஜ்) டாலராக பணம் சேர்க்க அமெரிக்கா செல்கிறான். தன் காதலுக்குகாக குடும்பத்தை உதரி தள்ளிவிட்டு அமெரிக்கா வரும் சீதாவை(ரெஜினா) நாயகன் ஒரு நாள் யதார்த்தமாக பார்க்கிறான். காலம் செல்கிறது. காதலனால் ஏமாற்றப்பட்டு ஆதாரவில்லாமல் நிற்கிறாள் சீதா.
அப்புறம் என்ன எல்லாரும் எதிர்பார்த்தது போல சுப்பிரமணியம், சீதாவிற்கு உதவுகிறான். சீதாவின் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கிறான். இதன்பின் சீதா இந்தியா செல்லும் போது தன்னால் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய சுப்ரமணியத்தையும் உடன் அழைக்கிறாள். சுப்ரமணியும் இதற்காக பெறும் பணத்தை பெற்றுக் கொண்டு அவளுடன் வர சம்மதிக்கிறான்.
இந்தியா வந்திறங்கும் இருவரையும், கணவன் , மனைவி என தவறுதலாக புரிந்து கொள்கிறார்கள். சுப்ரமணியம் என்ன செய்தான்? பணம் தான் முக்கியம் என்கிற மனநிலை விடுத்து சீதாவிற்கு உதவி செய்தானா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
சாய் தரண் தேஜ் படம் முழுவதும் அழகான தன் ஆழுமையால் டோலிவுட்டில் தான் ஒரு தவிர்க்க முடியாத நாயகான வருவேன் என சொல்லாமல் சொல்கிறார். நடனத்திலும், சண்டை காட்சிகளிலும் சாய் தரண் அசத்தியிருக்கிறார்.
ரெஜினா அழகால் ரசிகர்களை வசீகரிக்கின்றார். இருவருக்கும் இடையிலான காட்சிகளும் கவனம் ஈர்க்கின்றன.
ரசிகர்களின் மன ஓட்டத்தை சரியாக யூகித்து காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஹரிஸ் ஷங்கர். என்னடா வழக்காமன காட்சிகள் வருகிறதே என்று நினைக்கிற நேரத்தில் தடாலென நகைச்சுவை காட்சியோ இல்லை ஆர்ப்பாட்டமான காட்சியோ பாய்ந்து ரசிக்க வைக்கிறது.
வெங்கட்டின் இங்லிஷ் ஒன் லைனர் காமெடி காட்சிகள் கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்க வைக்கிறன. பிரம்மாண்ந்தம் நீண்ட நாட்களுக்கு பிறகு சற்றே வழுவான கதாபத்திரத்தில் அசத்தியிருக்கிறார். படத்தின் பலவீனம் என்று பார்த்தால் பழக்கப்பட்ட கதைதான். அதுவும் அந்த சாதாரண கிளைமேஸும் ரசிகர்களை நெளியச் செய்கிறது. மிகச்சில இடங்களில் வரும் இரட்டை அர்த்த வசனங்கள் முகச்சுழிப்பை உண்டாகுகின்றன. மற்றபடி படத்தின் குறை என்று சொல்லும் அளவிற்கு ஏதும் இல்லை.
படத்தின் தயாரிப்பாளரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும், அமெரிக்காவில் கண் கவரும் இடங்களை வண்ணமயமாக பதிவு செய்திருக்கிறார்கள். டோலிவுட்டிற்கே உரித்தான எல்லா மசாலாக்களையும் சேர்த்து அருமையாக பரிமாரியிருக்கிறார் இயக்குனர். முந்தைய தோல்வியில் இருந்து அசுர பாய்ச்சலை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ஹரிஸ் ஷங்கர். சாய் தரணுக்கு தனது நடிப்பு வாழ்க்கையில் இது ஒரு திருப்புமுனை படமாக இருக்கும். எல்லாம் சரி பழக்கப்பட்ட கதை என்றாலும் பரவாயில்லை என்றால் நீங்கள் நிச்சயம் பார்க்கலாம். பொழுது போக்கிற்கு நூறு சதவிகித உத்திரவாதம்.
சுப்ரமணியம் பார் சேல் - நல்ல விலைக்கு போகும்.