"காதலில் தோற்றதால் பெண்களை மயக்கி காதலித்து ஏமாற்றும் ஒருவன், உண்மையாகவே காதலை நேசிக்கும் ஒருவன், முறைப்பெண்ணை திருமணம் செய்ய நினைக்கும் ஒருவன், திருமணம் செய்து கொள்ளாமல் பெண்களை அனுபவிக்க நினைக்கும் ஒருவன் இப்படி நான்கு விதமான ஆண்களின் வாழ்க்கையில் நுழையும் ஒரு பெண்ணின் கதை. அவள் ஒரு தொடர்கதை சுஜாதா, அவள் அப்படித்தான் ஸ்ரீப்ரியா மாதிரி சாந்தினிக்கு சவாலான கேரக்டர்" என்கிறார் இயக்குனர் ஜி.கிருஷ்ணன்.
கோலிசோடா படத்தில் நடித்த சாந்தினியை அத்தனை எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. கோலிசோடா பசங்களின் காட்மதரான சுஜாதா ஆச்சியின் மகளாக நடித்திருந்தார். தற்போது அவர் சோலோ ஹீரோயினாக நடித்துள்ள குரங்கு கைல பூமாலை படம் ஆகஸ்ட் 7ந் தேதி வெளிவருகிறது. ஜெகதீஷ், கிருஷ்ணா, பிரவீன் குமார், கணேஷ் என்ற 4 பேர் ஹீரோக்களாக நடிகிறார்கள்.