லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கி்ட்டவங்களும் சரி...லவ் பக்கமே தலை வச்சு படுத்ததே இல்லைன்னு சொல்றவங்களும் சரி அவங்கள்ல எத்தனை பேர் அவங்களோட பையனோ , பொண்ணோ லவ் பண்ணினா லவ்வ புரிஞ்சுக்கிட்டு அவங்கள ஒண்ணா சேர்த்து வச்சு சந்தோஷப்பட்றாங்க....
லவ்வுங்கிற வார்த்தையை கேட்டாலே இன்னும் கொஞ்ச நாள்ல கடவுள் கூட கல்லெடுத்து கண்டிப்பா அடிக்க ஆரம்பிச்சுருவான்...ஏனா அந்தளவுக்கு ஒரு காலத்துல இதயபூர்வமா நேசிக்கப்பட்ட லவ்...இன்னிக்கு லவ்வுங்கிற பேர்ல நாம அடிக்கிற கூத்தெல்லாம் தெருவில ஓட்ற சாக்கடையை விட கேவலமா மாறிடிச்சுன்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா வச பாடிக்கிட்டு இருக்கையில..
அன்பை மட்டுமே ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு, புழுதிகாட்டின் அடையாளமாய் அழுக்கு முகங்களோடு முகங்களாக கைகளுக்கு எட்டாத கற்பனைகளுடன் திரியும் இருவருடைய அன்பின் உச்சத்தை, இன்று சமூகத்தை, மிகக்கொடூரமான முறையில் சீரழித்துக்கொண்டிருக்கும் இன்னொரு முக்கியமான பிரச்னையுடன் கலந்த அழகிய கிராம வாசனையுடன் சொல்வது இந்த மஞ்சள்.....
கதாநாயகனாக திரு அறிமுகம். இவர் இயக்குநர் பாலுமகேந்திரா சினிமா பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர். கதாநாயகியாக புதுமுகம் சசி நடிக்கிறார். இவர்களோடு ராஜ்கபூர், சண்முகராஜன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
படத்தை இயக்குநர் சத்யநாராயணா இயக்கியுள்ளார். செல்வநம்பி, படத்திற்கு இசையமைத்துள்ளார்.